நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உ தவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகின்றார். பல நற்பணிகளை ஏழை மக்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான்.
இந்த அறக்கட்டளையின் நோக்கம். சினிமாவை பொருத்தவரை எத்தனை நடிகர்கள் நடிகைகள் கு ழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்கள். அப்படி அறிமுகமான பல பேர் தற்போது ஹீரோ ஹீரோயினாக கூட நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் நடிகை மீனா சிறு வயதில் ரஜினி நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்பு ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் குழந்தையாக இருக்கும் பெண் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படம் வெளியான பிறகு அந்த குழந்தைக்கு வயது இரண்டு தான் ஆனது. அந்த குழந்தை வேறு யாருமல்ல சூரரை போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி அவர்கள் தான். இவர் மலையாள திரையுலகில் பிரபலமானார்.
நடிகையும் ஆவார். 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளப்படத்தில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படத்தில் தான் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அடுத்ததாக மலையாளத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
மேலும் மலையாள திரையுலகில் இருந்து நின்று விடக் கூடாது என்று நினைத்து அவர் அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்துள்ளார். தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 8 தோட்டாக்கள் இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் அதில் ஹீரோவாக வெற்றி நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி அந்தப் படத்தில் டூயட் பாடலுக்கு பாடி ஆடி இருந்தார். அதன் பிறகு தமிழில் மேலும் ஒரு படம் நடித்துள்ளார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்து இருந்த அந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார்.
அதன் பிறகு இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவருக்கு பொம்மி என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நடிப்பாள் ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அவர்கள் 1995ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
அதேபோல் சூர்யா முதல் நடிகராக அறிமுகமான படம் நேருக்கு நேர் அந்த படம் வெளியானது 1997ஆம் ஆண்டு. அப்படி பார்த்திருந்தால் அந்த படம் வெளியான பிறகு அபர்ணா பாலமுரளி அவர்களுக்கு வெறும் இரண்டு வயது தான் ஆனது என்று தெரிய வருகின்றது.