கடந்த 2020 வருடம் சினிமாவை முக்கால் வருடமாக முடக்கிப் போட்டது. பெரும் நஷ்டத்தையும் தந்துள்ளது. அதே வேளையில் சினிமா துறையைச் சார்ந்த பலரும் ம ரணம் எய்தினர். இந்த வருடம் முதலே பல்வேறு சினிமா துறை சார்ந்த பிரமுகர்கள் இ றக்கும் செய்திகள் அடுத்தடுத்து காதுகளை எட்டுகின்றன.
மேலும் அந்த வகையில் அடுத்ததாக பிரபல பாடலாசிரியரும், வசன கர்த்தாவுமான ராஜேந்திர பிரசாத் கடந்த செவ்வாய் கிழமை அன்று கா லமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் 2000 பாடல்களையும், 300 படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி ம றைந்த பாடகர் எஸ்.பி.பி கூட இவரை பாடல்களை எழுதச் சொல்லி உற்சாக மூட்டியுள்ளாராம். கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம், தசாவதாரம் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது இவர் தான் இப்படங்களுக்கும் வசனம் எழுதினாராம்.