சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.
கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் வி வாகரத்து செய்துக் கொண்டனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை காஜல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவ்வபோது தெரிவித்து வந்தார். இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது தி டிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் திருமணம் கொ ரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல த ப்பா எடுத்துக்காதிங்க என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாப்பிள்ளை யாரு என்று கேட்டு வருகின்றனர்.