தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் 35 வருடங்களுக்கும் மேலாலாக திரையுலகில் தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் நாயகிகளைப் பொறுத்தவரை திரையுலகில் அத்தனை காலம் தாக்குப் பிடிப்பதில்லை.
மேலும் அந்த வகையில் நடிகை சிந்து டோலானி தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகை ஆவர். இவர் டோலானி 1983 ஜூலை 19 அன்று இந்தியாவின் மும்பையில் பிறந்தார். அவர் வடக்கில் ஒரு ஃபேர் & லவ்லி கிரீம் மாடல் பெண்ணாகவும், வெற்றிகரமான நடி கையாகவும் இருந்துள்ளார்.
சிந்து டோலானி தெலுங்கு திரைப்படமான ஐத்தே மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கில் அவரது முதல் பிரபலமான படம் அதனொக்கடே. அப்படித் தான் குறுகிய கால அளவில் நடிப்பில் உச்சத்தில் இருந்தார் நடிகை சிந்து துலானி. அதன் பிறகு தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிந்து துலானி. அந்தப் படத்தின் வெற்றியால் வெகுவாகப் பேசப்பட்டார்.
மேலும் அவர் தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘மன் மதன்’ திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றாலும் சிந்து துலானிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. பின்னர் அவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், விகிராமுடன் மஜாவிலும் தோன்றியுள்ளார்.
சோனி டிவியில் ஒளிபரப்பான குடும்ப என்ற தொலைக்காட்சி தொடரிலும் அவர் நடித்தார். மணிரத்னத்தின் மேடை நிகழ்ச்சியான நேற்று இன்று நாளை ஆகியவற்றில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். இதன் காரணமாகத் தெலுங்கு திரையுலகம் பக்கம் ஒதுங்கினார் சிந்து துலானி. அங்கு அவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தது.
தமிழில் விக்ரம் நடித்த ‘மஜா’ படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சிந்து துலானி. தெலுங்கில் ‘சித்ரகதா’ படத்தில் நடித்த சிந்து துலானியை. அதன் பின்னர் திரையில் பார்க்கவே முடியவில்லை. நடிகை சிந்து அவருடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து விட்டு செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில் தன் கணவர் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை சிந்து துலானி வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்ப்பவர்கள் அடடே சிந்து துலானியா இது. என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதோ அந்த குடும்ப புகைப்படம்