விஜய் டிவியில் “கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ், தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை கடந்த 2016-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் அக்மார்க் காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணமாம்.சின்னத்திரையில் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்களும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் காதல் திருமணம் செய்து கொள்வது சாதாரண விசயமாகிவிட்டது.
மர்மதேசம் ஜோடி சேத்தன் தேவதர்ஷினி தொடங்கி இன்றைக்கு அமித்பார்க்கவ் ஸ்ரீரஞ்சனி திருமணம் வரை பல சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அமித் பார்க்கவ் பெங்களூரு பையன், ஸ்ரீரஞ்சனி திருநெல்வேலி பொண்ணு… மீடியா வேலைக்காக சென்னை வந்த இடத்தில் நட்பாக அறிமுகமாகி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே தற்போது சுற்றமும் நட்பும் புடைசூழ திருமணம் நடந்தது
ஸ்ரீரஞ்சனி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கேள்வி பாதி, கிண்டல் பாதி’, “ஆர் யு தி அப்பாடக்கர்?’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிராலமானவர்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஸ்ரீரஞ்சனி தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ரகிட்ட.. ரகிட்ட பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை இணையத்தில் அப்லோடியுள்ளார்.