பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பைனல்ஸ் நடந்து வருகிறது. இதில் ஆரி, பாலா, ரியோ, ரம்யா, சோம், கேபி, ஷிவானி உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். இதில் இருந்து ஒரு நபர் டிக்கெட் டூ பைனல்ஸ் டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்ல உள்ளார்.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி உள்ளவர் தான் ரம்யா பாண்டியன். இதற்கு முன் திரைப்படங்களில் நடித்து அசதி வந்த ரம்யா. தற்போது இந்த நிகழ்ச்சியின் முலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் தற்போது நடிகை ரம்யா பாண்டியனின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது அவர் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.