தமிழ் சினிமா கண்டறிந்ததில் மிக சிறந்த ஒரு கலைஞன் என்றால் அது நம் வைகைபுயல் வடிவேலு தான். தனது ஈடுகொடுக்க முடியாத நடிப்பாலும், அவரது காமெடி டைமிங் ஆளும், மேலும் பல குணசித்திர கதாபாதிரத்தாலும், மக்களிடையே இன்றும் பேசபடுபவர் வடிவேலு, என்னதான் காமெடியனாக தமிழ் சினிமாவில் வளம் வந்தாலும் அவரி ஒரு குணச்சித்திர நடிகராகவும் ஏற்று கொண்டனர் மக்கள்.
அவரால் சிரிக்க வைக்கவும் முடியும் மக்களை சோ கத்தில் ஆ ழ்த்தவும் முடியும், தன்னை கண் இமைக்காமல் ரசிக்க வைக்கவும் முடியும் என்பதால் தான் இன்றும், மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் நேரம் யாரை விட்டது, அரசியலில் தனது வாயை விட்டு கெட்டவர். அரசியலில் விஜகாந்தினை மிக மோ சமாக வசைபாடி மேடைக்கு மேடை பேசி வந்தார்.
திமுக மேடைகளில், வாகனங்களில் ஏறி தீவிரப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது நேரம், விஜயகாந்த் இடம் பெற்றிருந்த அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சியை இ ழந்தது, படு தோ ல்வியைச் சந்தித்தது. பின்னர் இவருக்கும் நடிக்க பெரிதாய் யாரும் வாய்ப்பினை தருவதாய் இல்லை. அரசியலில் வாயை விட்டு தனது பெயரை கெடுத்து வைத்திருக்கிறார்.
இவரை விட்டால் தனது படமும் இவருடன் சேர்ந்து விமர்சிக்கப்படும் என இயக்குனர்கள் தயங்கினர். பிறகென்ன வடிவேலுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டுயது தான். படம் இல்லாமல் அமைதியாக வீட்டோடு இருந்து விட்டார் வடிவேலு. அவரே கூட நடிக்க விரும்பாமல் ஓய்வை விரும்பினார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த 2013ம் ஆண்டு வடிவேலுவின் மகள் கன்னிகா பரமேஸ்வரிக்கு மதுரையில் திருமணம் நடந்தது.
மிக மிக அமைதியாக, பெரிதாய் யாரையும் அழைக்காமல் சினிமா துறையில் இருந்து யாருமே வரவில்லை என்றே கூறலாம், அப்படி வடிவேலு வீட்டு கல்யாணம் போலவே இல்லாமல் கிட்டத்தட்ட ரகசியமாக நடத்தினார் தனது மகள் திருமணத்தை வடிவேலு. காரணம், அப்போது இருந்த அரசியல் நெ ருக்கடி.
திரையுலகத்திலும் சரி, அரசியல் உலகத்திலும் சரி யாரையும் கூப்பிடவில்லை. உற்றார், உறவினர்களோடு நிறுத்திக் கொண்டார். உங்கள் வாயினை குறைத்திருந்தால் இப்படியெல்லாம் ரகசியமாய் திருமணம் செய்யும் நிலையை உங்களுக்கு வந்திருக்கும் என அவரது ரசிகர்களே வ ருத்தப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டே வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரையில் நடந்தது. இதுவும் மைகள் கல்யாணம் போல அமைதியாக சத்தம் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இதையும் கூட சிம்பிளாக முடித்து விட்டார் வடிவேலு. யாருக்கும் அழைப்பு இல்லை.
மேலும் அவர் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்த பெண் யார் என்று கேட்டால் அவர் பெயர் புவனேஸ்வரி. அவரது சொந்த ஊரிலேயே மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தவர். பல வருடங்களாக பழகி நல்ல உறவினை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த பெண்ணிற்கு மகன் மூலமாக நல்ல வாழ்வினை ஏற்படுத்தி தரலாம் என்ற தாரள மனதுடன் தனது மகனுக்கு பேசி முடித்துள்ளார். இவர் வடிவேலுவின் மனைவி வழி சொந்தம். ஒரு பைசா கூட வ ரதட்சணையாக வாங்காமல் அனைத்துச் செலவுகளையும் வடிவேலுவே பார்த்துக் கொண்டாராம்.
அனைத்து தமிழ் மக்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவருக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு நடக்கும் போது அது நாலு பேருக்கு தெரியாமல் ரகசியமாய் நடக்கிறது என்பது வே தனையான ஒரு செய்தி தான்.