நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன் சாமியாராக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன்.
இவர் தனது ஒல்லியான உடல் தோற்றத்தை வைத்து காமெடி செய்து, ரசிகர் பட்டாளத்தையே வெய்துத்திருந்தார். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொண்டை பு ற் று நோ யால் உ யி ரிழந்தார். இந்த நிலையில் இவருக்கு காமேஷ்வரா என்கிற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.
அவரும் தற்போது சாமியாராக மாறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ’12 வருடம் தவமிருந்து ஐயப்பனையும், ஈஸ்வரனையும் வேண்டி என்னைப் பெத்ததாங்க. அந்தத் தாக்கமும் கூட என்னை இந்தப் பயணத்துக்குத் திருப்பியிருக்கலாம்.
சாய் பாபா, இயேசு, சித்தர் உள்ளிட்டோர்களை நேரில் சந்தித்தேன் பிறகு தான் ஆன்மீகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, தற்போது சாமியாராக அமர்ந்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.