தற்போது பலரும் பவிதமான விஷயங்களை செய்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இங்கு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின்புறத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதை மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ வீடியோஎடுத்து வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் இது எப்படி சாத்தியம் என குழம்பி வருகின்றனர்.
நாகாலாந்தில் தேனீக்களுக்கும், தேனுக்கும் எப்போதுமே பஞ்சமிருந்ததில்லை. அப்படி ஒரு தேனீக்களின் இடமாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5 ஆம் தேதியை தேனீக்கள் தினமாக அந்த ஊரிலுள்ள மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் தேனீக்கள் நபர் ஒருவரின் பேண்டில் கூடு கட்டியுள்ள சம்பவம் அங்கிருப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் அவரைப் பார்த்து அங்கு சுற்றியிருப்பவர்கள் பலரும் கிண்டலடித்து கேலி செய்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜூ இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
This is really a Beehive in an unlikely place. This can happen only in Nagaland!
Sources; @MmhonlumoKikon from Nagaland pic.twitter.com/fpqpD5JJku— Kiren Rijiju (@KirenRijiju) August 21, 2019