பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில் லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா
மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களே கிடைகின்றது.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது புடவை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “கடி னமான நேரங்களில் அமைதியாக இருங்கள். நல்ல நேரம் வந்து கொண்டே இருக்கின்றது. அதுவரை அமைதியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.