சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா. அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா(Pranitha Subhash), அதன் பிறகு கதை தேர்வில் சொ தப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ச குனி, எனக்கு வாய்த்த அ டிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப் போது ஹாட் போட்டோ சூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த கொ ரோனா சமயத்தில் பழைய ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்து வந்ததால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை கூடியது.
எப்போதுமே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் முன் கூட்டியே சொல்லி விடும் பிரணிதா, தனக்கு நித்தின் ராஜு என்ற தொழிலதிபருடன் நடக்க இருந்த திருமண விஷயத்தை ம றைத்து விட்டார்.
இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக நடந்த திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.