உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் எங்குமே பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில நாடுகளில் 2021 ஜனவரியில் தான் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காலம் என்பதால் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆந்திர மாநிலத்திலும் கொரொனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது மூடப்பட்டிருந்த பள்ளிகளை வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
மேலும், பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் ஆரம்பப் பள்ளிகள், உயர் நிலை பள்ளிகள், மேல் நிலை பள்ளிகள் இவை அனைத்தும் வாரத்தில் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும் என்று பிறகு அறிவிக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஆந்திர மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் தற்போது அறிவித்துள்ளார்.