சோனு சூட்டிற்கு மிக பெரிய விருது வழங்கி கவுரவித்த ஐநா சபை என்ன விருது தெரியுமா?

செய்திகள்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலத்தில் பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். பல தொழிலாளர்கள், பல கிமீ நடந்தே சென்று தங்களது சொந்த ஊர்களை அடைந்தனர். அதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

அப்போது நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தார் நடிகர் சோனு சூட். மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிப்படைந்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி அனுப்பியது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் வீடு திரும்புவதற்கான விமான வசதி உள்ளிட்டவற்றையும் நடிகர் சோனு சூட் செய்திருந்தார்.