சுப காரியங்களில் ஹோமம் வளர்ப்பது எதற்கு?ஹோமம் வளர்க்கும் புகையினால் அவ்வளவு நன்மைகள் இருக்கிறதா…!!

ஆன்மிகம்
ஹோமம் செய்வதை நாம் கோவில்களிலும், வீடுகளிலும் ஹோமங்கள் செய்வதை நாம் பார்த்திருப்போம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான நோக்கங்களுக்கு செய்யப்படுகிறது. ஆனால் ஹோமம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் முதலில் யாக குண்டம் அமைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நாம் அதன் படி செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று விடுகின்றது.
ஹோமம் வளர்ப்பதால் என்ன பயன்கள்: இந்த ஹோமத்தில் பல்வேறான மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன பலாசு, கருங்காலி, அரசு, அத்தி, சந்தனக்கட்டை, எள், உழுந்து, நெற்பொறி, பயறு, நெல்,  வன்னி, ஆல், வில்வம், நாயுருவி, தர்ப்பை, வெள்ளெருக்கு, தேங்காய், மா, நெய், எருக்கு, அறுகு, முருக்கு இவை எல்லாம் சேர்ந்து எரிந்து அதிலிருந்து வரும்  புகையால் தான் காற்றில் இருக்கும் நச்சுக் கிருமிகள் முற்றிலும் அழிந்து விடுகிறது.
அதுமட்டுமின்றி இந்த இரசாயன மாற்றத்தால் அந்த வாயுவை நாம் சுவாசிப்பதால் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல்புண், தலைவலி, போன்ற நோய்கள் நீங்குகின்றது. மேலும் இந்த புகை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
ஆனால் நம்மில் சில பேர் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் ஹோமப் புகையைப் பார்த்து அஞ்சுகின்றனர். இனிமேல் ஆலயத்தில் ஹோமம் செய்தால் அருகில் சென்று ஹோமப் புகையை நன்றாக சுவாசியுங்கள்.
மேலும் ஹோமத்தில் நாம் கலந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவோம். இந்த புகையால் காற்றில் வரும் நச்சுக்களை நீக்கி நல்ல சுத்தமான காற்றை நாம் பெற்று உடலை நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருப்போம்.