தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும் முதல் படத்திலேயே மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டு பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிப்பார்கள். இப்படி இளம் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பே முன்னணி நடிகைகளுக்கு தோழியாகவும் அல்லது சில சைடு கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார்கள்.
மேலும் நாளடைவில் அந்த புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்களுக்கு ஆ ச்சர்யத்தை கொடுக்கும். இப்படி கதாபதிரங்களில் நடிக்கும் நடிகைகள் பின்னர் பிரபலமாகி குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடிக்க தொடங்குவார்கள். இப்படி நடிகைகளுக்கு பின் தோழியாக நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபதிரங்களில் நடித்தவர் நடிகை நீலு.
மேலும் இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருந்தாலும் அதன் பின்பு ஆயுத எழுத்து, ஆஞ்சிநேய, குண்டக்க மண்டக்க, சிங்கம் புலி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் சிங்கம் புலி. நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடிக்க நடிகை ரம்யா மற்றும் சந்தானம் நடிக்க இந்த திரைப்படத்தை இயக்குனர் சாய்மணி இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆண்டியாக நடித்திருந்த நீலுவின் கதாபாத்திரம் இளசுகள் அனைவருக்கும் பிடித்திருந்தது. இவர் ஆண்டியாக மீன் வாங்க வரும் போது சைட் அடிக்கும் ஜீவா பின்னர் இவர் வீட்டுக்கே சென்று ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியமைக்கபட்டு இருக்கும் இறுதியில் தான் தெரியும் இவர் ஜீவாவின் தோழியின் அம்மா.
இந்த காட்சி படமாக்க படும் போது இயக்குனர் இவரிடம் இப்படிபட்ட காட்சிகள் வரும் என்று சொல்லவில்லையாம், ஜீவா உங்களை சைட் அசைப்பது போன்ற காட்சிகள் மட்டும் இடம் பெரும் என்று கூறியிருந்தாராம்.
ஆனால் இறுதியாக படத்தை பார்க்கும் போது இவருக்கே ஆச்சர்யமாக இருந்ததாம். அதனால் தான் அதன் பின்பு படம் நடிப்பதையே விட்டுவிட்டேன் என கூறிய இவர் தற்போது பியூட்டிஷனாக வேலை செய்து வருவதாகவும் கூறி இருந்தார். இது இவர் பேட்டி கொடுத்திருந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.