நடிப்பு மட்டும் போதாது என்ற அனைத்தும் தேவை சினிமாவில் நடிக்க என்ற நிலையில்,தமிழ் திரையுலகில், நடிகையாக நிலைத்து நிற்க, கவர்ச்சி தேவை இல்லை, நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதும், என நிரூபித்து காட்டியவர் நடிகை அஞ்சலி. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடி தெரு’, என ஆரம்பத்திலேயே தான் நடித்த படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
இவரை சுற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழ் திரை உலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.
இவர் அதற்கு விரோதமாக ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார்.இவர் இவ்வளவு படம் நடித்து இருந்தாலும் அவரை திரை உலகில் பிரபலமாக்கியது என்னவோ “அங்காடி தெரு” திரைப்படம் தான்.
அதன் பிறகுஇவர் நடித்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஜெயிக்கும் அஞ்சலிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ் இன் டுகெதர் வாழ்கையை மேற்கொண்டார்கள்.
ஆனால், சில மாதங்களில் பிரிந்து விட்டனர்.இவர் நடித்த அங்காடி தெரு மற்றும் கற்றது தமிழ் என்ற இரண்டு திரைப்படத்திற்கு மட்டுமே 5 விருதுகளை வாங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான, நாடோடிகள் 2 என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே அப்பளம் போல நொறுங்கி விட்டது.
நாடோடிகள் முதல் பாகத்தின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு புதிய கதையை எடுத்து தன்னுடைய தனிபட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை படமாக எடுத்து ரசிகர்களிடையே வெறுப்பை மட்டும் சம்பாதித்தார் சமுத்திரகனி.
தற்போது, ஆனந்த பைரவி, நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப், “ஓ”, காண்பது பொய், பிக்பாஸ் என அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது புகைப்படங்கள் பதிவிடும் இவர் தற்போது தன்னுடைய உள் ளாடை தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பிரண்டான டி-சர்ட் அணிந்து கொண்டு வானத்தை நோக்கி பறப்பது போல போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.